சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் இருவேறு கல்லூரி மாணவர்கள் மோதல்… 2 மாணவர்களை கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை;

சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கடற்கரையில் இருந்து நேற்று பிற்பகல் அரக்கோணம் புறப்பட்ட மின்சார ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த ஒரு பிரிவு மாணவர்கள் ரயிலில் திடீரென புகுந்து பயணிகளை அச்சுறுத்தினர். ரயிலில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேரை பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் தாக்கியது. பதிலுக்கு மாநில கல்லூரி மாணவர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களின் காட்டு மிராண்டித்தனமான இந்த சண்டையை பார்த்து அதிர்ச்சியும் பீதியும் அடைந்த பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு ஓடினர். ரயில்வே போலீசார் வருவதற்கு முன்பே, மாணவர்கள் அனைவரும் தப்பிச் சென்றனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்களான ஜகதீஷ், தினேஷ் ஆகியோர் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பிடிபிட்டனர். இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்களுக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து ஆவடி போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களுக்குள் யார் பெரியவர்கள் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *