உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் 200 சதவீதம் உயர்வு… 7 வது ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் அதிகரிப்பு;

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதியம் 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஊதியம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம், தற்போது வழங்கப்பட்டு வரும் 90 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 வது ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *