வேலூரில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்… கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல்;

வேலூரில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்த்தபட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைகல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இசசம்பவத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுவதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *