சென்னை தனியார் மருத்துவமனையில் ம. நடராஜன் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடம் ; பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு, வி.கே. சசிகலா மனுத்தாக்கல்

சென்னை தனியார் மருத்துவமனையில் ம. நடராஜன் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பெங்களூரு சிறையில் உள்ள வி.கே. சசிகலா பிரோலில் வெளிவர அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.

வி.கே. சசிகலாவின் கணவர் ம. நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ள அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த பிரச்சினைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நடராஜன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பெங்களூரு சிறையில் உள்ள வி.கே. சசிகலா பரோலில் வெளிவர அனுமதி கேட்டு, மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *