கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை இதுவரை குறையாமல் இருமடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலும் மழை வெளுத்துவாங்குகிறது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. வரத்து குறைந்ததால், கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை இரு மடங்கு வரை உயர்ந்துள்ளதாக காய்கறி வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.