சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடவும், தீர்ப்பு வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கருத்தரங்கம் சென்னை பாரிமுனையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் முனைவர் ஜக்மோகன் சிங், நந்தகுமார் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடவும், தீர்ப்பு வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

டெங்கு பரவுவதை தடுப்பது மாநில அரசுக்கு மட்டும் இல்லாமல் மத்திய அரசுக்கும் பொறுப்புள்ளது என தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், டெங்குவை தடுக்க வல்லுநர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கமல் அரசியலுக்கு வந்து மக்கள் பிரச்னையை கையில் எடுக்கட்டும்; மக்கள் ஆதரித்தால் அதனை ஆதரிப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 9 மற்றும் 10-ம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *