சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதிலேயே முழு நேரத்தை செலவிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பிடுவோம் என்று கூறிய அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தங்களது அணி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *