தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் நாளை வரை தமிழக அரசு சார்பில், 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்னாகுளம், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் எனவும், சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக செய்யப்பட்ட முன்பதிவின் மூலம் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் என மொத்தம் 7 கோடியே 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பேருந்துகள் புறப்படும் இடம்
* கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை
* கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை
* கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்னாகுளம், பெங்களூரு
* அண்ணாநகர் மேற்கு பணிமனை பேருந்து நிறுத்தம் – ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கம்
* பூந்தமல்லி பேருந்து நிலையம்
ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்
* தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையம் – கும்பகோணம், தஞ்சாவூர்
* சைதாப்பேட்டை மாநகர பேருந்து பணிமனை – புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்