சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. ஆர்.கே.நகரில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளரை சேர்த்து 5பேர் மட்டுமே அலுவலத்திற்குள் அனுமதிக்கபடுவார்கள் என்றும், வேட்பாளர்கள் வரும் வாகனங்களில் 3 வாகனங்கள் மட்டுமே 100 மீட்டர் உட்பட்ட பகுதியில் அனுமதிகப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவை தவிர முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாததால் முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *