சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2017-11-26