சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்குகிறது. உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மற்றும் முகேஷ் அம்பானி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். சுவிட்சர்லாந்து சென்ற மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். அப்போது இந்திய தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர். இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரேசாமே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். உலக பொருளாதார மாநாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.