ஆ.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தமது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஊர்வலம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.விற்கு பயந்து முதலமைச்சர் அணி செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், ரஜினி, கமல் அரசியல் வருகையால் தமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், நம்பர் 1 யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். ஆர்.கே நகர் தொகுதியின் தேவைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தயார் எனவும் அவர் கூறினார்.
2018-01-23