தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சரிடம் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய-இலங்கை கூட்டுப் பணிக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய-இலங்கை மீன்வளத்துறை செயலர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர-வும் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் இருந்த மீனவர்களும் படகுகளும் அண்மையில் விடுவிக்கப்பட்டது குறித்து இந்திய தரப்பு திருப்தி தெரிவித்துள்ளது. இலங்கை வசமுள்ள அனைத்து படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய தரப்பில் அப்போது வலியுறுத்தப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.