சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், விசாரணைக்காக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறுமி ஹாசினி வழக்கில் முன்ஜாமீன் பெற்ற தஷ்வந்த், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பையில் தஷ்வந்தை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தம் தாயாரையும் கொன்றதாகவும் அவர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்த், விசாரணைக்காக கடந்த திங்களன்று 2வது முறையாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று சாட்சிகள் வராததால், வழக்கு புதன்கிழமையன்று மறு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நேற்று தஷ்வந்த்தை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் மாங்காடு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பின், தஷ்வந்தை வரும் 26ம் தேதி ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *