கொல்கத்தாவில் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
டங்கரா பகுதியில் ரசாயனப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்தது. அங்கு திங்களன்று மாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். ரசாயனப்பொருட்கள் என்பதால் மோசமான நெடியுடன் கொளுந்துவிட்டு நெருப்பு எரிகிறது.