பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 13பேர் உயிரிழந்தனர்.
பிரான்சின் தென்மேற்கில் உள்ள ஆடி என்னும் பகுதியில் சில மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் முதல் மாடியிலும் கூரைகளிலும் ஏறி உயிர் தப்பினர். தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை மீட்டனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 13பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ட்ரீப்ஸ் என்னும் நகரில் வைன் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு கிட்டங்கியில் வெள்ளம் புகுந்து வெளியேறியதில் வெள்ளத்தில் வைன் கலந்து தெருவில் பாய்ந்தது.