கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இடைவிடாது பெய்த கனமழையால் கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று குறிப்பிட்டுள்ளார். இனியும் இதுபோன்று நிகழ்வுகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *