மானிய கேஸ் சிலிண்டர் 4 ரூபாய் 50 காசுகளும், மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. அதன்படி, மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் 4.5 ரூபாயும், மானியம் இல்லா சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், 14.2 கிலோ அளவிலான மானிய சமையல் சிலிண்டரின் விலை சென்னையை பொறுத்தவரையில் 483 ரூபாய் 69 காசுக்கும், மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் விலை 93 ரூபாய் உயர்த்தப்பட்டதால், சென்னையில் 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *