உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 18 பேர் பலி ; விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு….  

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *