குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியளவில் நிறைவடைந்த தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் அமோகமாக வாக்களித்த குஜராத் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தியர்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க. வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.