ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

நிதி பற்றாக்குறையை சரிசெய்தல், ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மே மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைகள் அடுத்த 3 மாதத்தில் தீர்க்கப்படும் என்று அரசு உறுதி அளித்திருந்ததாக தொழிற்சங்கங்கள் கூறியிருந்தன. இந்நிலையில், தொமுச, சிஐடியு, எஐடியுசி உட்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கத்தினர் வரும் 14 மற்றும் 15 ம் தேதிகளில் அனைத்து பணிமனைகளிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *