விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக மோடி அரசு லோக்பால், லோக்ஆயுக்தா சட்டங்களை பலவீனப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் மத்திய அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசை கண்டித்து மார்ச் 23ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *