கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேஆர்பி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 28 கன அடியாக உள்ள நிலையில், அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 52 அடி முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *