தமது மகன் ஜெய் ஷா எத்தகைய பண மோசடியிலும் ஈடுபடவில்லை என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா டுடே பத்திரிகை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, மகன் மீதான புகாரை மறுத்தார். இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த ஆங்கில இணையதளத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியினர் மீது கூறப்பட்ட புகார்களுக்கு இதுவரை அவர்கள் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததுண்டா எனவும் கேள்வி எழுப்பினார். தமது மகன் ஜெய்ஷாவின் நிறுவனம், அரசிடம் நிலமாகவோ வேறு ஒப்பந்தங்கள் மூலமாகவோ எந்த உதவியையும் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மகனின் நிறுவனத்திற்காக வங்கிகளில் நீண்டகாலக் கடன் மட்டுமே பெறப்பட்டிருப்பதாக கூறிய அமித் ஷா, அவை பிணையில்லாக் கடன்கள் அல்ல என்றும் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *