கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் கடன் பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் விரல் நகத்தில் 20 கிலோ வரை எடையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூக்கில் 2 இன்ஞ் டிரில் எந்திரத்தை விடுவது போன்ற விபரீத சாதனைகளையும் ஹேமச்சந்திரன் செய்து வந்தார். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வேலைக்கு செல்லாத காரணத்தால் ஹேமச்சந்திரனுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு மதுபோதையில் ஹேமச்சந்திரன் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது, மனைவி கடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து, தனி அறைக்குச் சென்ற ஹேமச்சந்திரன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *