காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

காவிரி நீர் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 7பேரை விடுவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிப்பதாக கூறினார். மேலும் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *