ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ வீரர்கள் 4பேர் உயிரிழப்பு;

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தில் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தங்கியிருந்த நிலைகளை நோக்கி அவர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் மீதும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் கேப்டன் கபில் குண்டு, ராணுவ வீரர்கள் ராமவதார், சுபம் சிங், ரோஷன் லால் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *