காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு… தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாறுபட்ட கருத்து…

காவிரி நீர் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று தெரிவித்தார்.

இதனிடையே அவரது கருத்துக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை, காவிரி நீர் குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்திருப்பது தமது சொந்த கருத்து என்றும், இது பாஜகவின் கருத்து இல்லை என்றும் கூறினார்.

தன்னை பிரதமருக்கு நெருக்கமானவர் எனக் கூறிக்கொள்ளும் சுப்பிரமணியசுவாமி, தமிழர் என்ற முறையில் பிரதமரிடம் பேசி காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்தை ஏற்க முடியாது என்று அதிமுக எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் கருத்து கண்டித்தக்கது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *