நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்… சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் என அறிவிப்பு;

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிப்ரவரி 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கடந்த 27ம் தேதி பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *