கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *