கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெறும்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி

கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில், விடுதலை கலை இலக்கிய பேரவையின் சார்பில் மருதம் கலைக்கூடம் கட்டுடைக்கும் சினிமா படைப்பாளிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஜோக்கர் படத்தின் இயக்குநர் ராஜூமுருகன், விழித்திரு படத்தின் இயக்குநர் மீராகதிரவன், அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், மற்றும் எழுத்தாளர்கள், திரைப்படத்துறையை சேர்ந்த கலைஞர்கள் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இவ்விழாவில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், சாதியவாதிகள், மதவாதிகளின் கைகளில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கும் திரைப்படத்துறையை புரட்சிகர சக்திகள் கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கருத்தியல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் என்று எழுச்சித்தமிழர் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித், கோபி நயினார், ராஜூ முருகன், மீரா கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *