ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியின் திமு.க வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.