கடவுள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால், இனியும் அமைதியாக இருக்க முடியாது… தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ஆவேச பேச்சு…

கடவுள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால், இனியும் அமைதியாக இருக்க முடியாது என்றும், தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்றும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் குறித்து கட்டுரை எழுதி, அதே தலைப்பில் உரை நிகழ்த்திய கவிஞர் வைரமுத்துவையும், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரும் 3ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்புக் கேட்காவிட்டால், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போக மாட்டோம் என கூறிய ஜீயர், தங்களாலும் கல்லெறியவும் சோடா பாட்டில் வீசவும் முடியும் என ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *