கச்சா எண்ணெய் விலை 4ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஈரானுடனான அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக்கொண்டது. இதையடுத்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் ஈரானுடனான வணிகத்தை நவம்பர் நான்காம் நாளுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நவம்பர் 4முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85அமெரிக்க டாலராக உள்ளது. இது 2014நவம்பருக்குப் பின் வந்த 4ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக அளவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *