கோயம்பேடு அருகே வீட்டின் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

கோயம்பேடு அருகே வீட்டின் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

சென்னை கோயம்பேட்டில் ஏசியில் கேஸ் கசிவு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னீர்குப்பத்தில் உள்ள டொமினோஸ் பிட்சா நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி வீட்டில் இருந்து வந்தார். இவர்களது 8 வயது மகன் கார்த்திகேயன் மேட்டுக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை இவர்கள் வீட்டுக் கதவு வெகுநேரம் திறக்கப்படாததையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவைத் உடைத்துப் பார்த்த போது மூவரும் படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றிக் கிடந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரவு உறங்கிக் கொண்டிருந்த போது ஏசியில் கேஸ்கசிவு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் மூவரும் உயிரிழந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *