மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்
இதே போன்று, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் , மத்திய அமைச்சர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஏராளமான பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் திரண்ட இந்த நிகழ்வில் பக்தி கீதங்கள் இசைக்கப்பட்டன