ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஓராயிரம் பாபர் மசூதிகளை கட்ட வேண்டும்; இஸ்லாமியர்களுக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…

ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஓராயிரம் மசூதிகள் கட்டப்பட வேண்டும் என்றும் அப்படி கட்டப்படும் அனைத்து மசூதிகளுக்கும் பாபரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாள், தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத்தின் பொதுசசெயலாளர் கலி.பூங்குன்றன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுசெயலாளர் முகமது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான்பாக்கவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர் இதில் பேசிய எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன், மதசார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு இந்துக்களை காப்பாற்றும் அரசு அல என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டும் காப்பாற்றும் அரசாக திகழ்வதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகாவை பலவீனப்படுத்துவதற்காகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஓராயிரம் மசூதிகள் கட்டப்பட வேண்டும் என்றும் அப்படி கட்டப்படும் அனைத்து மசூதிகளுக்கும் பாபரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் இஸ்லாமியர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

முன்னதாக பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான்பாக்கவி ஆகியோர் வெறுப்பு அரசியல் செய்யும் பாஜவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *