ஒகி புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களில் 433பேர் கரை திரும்பவில்லை; மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….

ஒகி புயலின் போது கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களில் இன்னும் 433 பேர் கரை திரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் ஒக்கி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்ற மாயமான மீனவர்கள் ஏராளமானோர் பிற மாநிலங்களில் கரை சேர்ந்து தமிழகம் வந்தடைந்தனர். இந்நிலையில் ஒகி புயலின் போது கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் தமிழகத்தை சேர்ந்த 433 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களும் இன்னும் கரை திரும்பவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரையிலான கணக்கின்படி கேரளத்தை சேர்ந்த 63 மீனவர்களும், தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களும் ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஒக்கி புயலில் உயிரிழந்து கடலில் மிதந்தவர்கள், கரை ஒதுங்கிய சடலங்கள், சக மீனவர்களால் மீட்கப்பட்ட சடலங்கள் என்று கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 40 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *