ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலால் மாயமான மீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆளுநர் மாநில அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் நல்லக்கண்ணு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *