கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 439 வீடுகள் மற்றும் கட்டடங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. வடக்கு சாண்டியாகோ பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் எரியத் தொடங்கிய காட்டுத்தீ, அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பரவியது. இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி 439 வீடுகள் மற்றும் கட்டடங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தீவிபத்தால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே காட்டு தீயை தீயணைப்பு துறையினர் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *