தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷீலாப்பிரியாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தகவல் ஆணையர்களாக செல்வராஜ், தமிழ்குமார், பிரதீப் குமார், முத்துராஜ் ஆகியோருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தகவல் ஆணையர்கள் பதவி ஏற்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *