ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…..

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்து தமிழக அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவுக்கே வழிக்காட்டப்படும் தீர்ப்பு என்று தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், சங்கர் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 3பேருக்கும் உரிய தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *