கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என தன்னிடம் கோரிக்கைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 லட்ச ரூபாய் நிதியுதவியுடன் கூடுதலாக 6 லட்ச ரூபாய் தனது பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.