ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎஸ் அதிகாரி மகேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் டான்ஜெட்கோ ஏடிஜிபியாக ஸ்ரீலட்சுமி பிரசாத்தும், ரயில்வேதுறை ஏடிஜிபியாக சைலேந்திர பாபுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அசுதோஸ் சுக்லா, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ராஜேஸ் தாஸ் அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஏடிஜிபியாக கரன் சின்ஹாவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 21 ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளை இடமாற்றம்செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *