தீவிரவாத ஒழிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய – ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, போன்ற தீவிரவாத அமைப்புகள் மீதும், ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராகிம் போன்ற சர்வதேச தீவிரவாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரஸ்சல்சில் கடந்த ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பின்னர் இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
பின்னர் பேசிய ஐரோப்பிய யூனிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க், தீவிரவாத ஒழிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.
இம்மாநாட்டில், வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்த உறுதி மேற்கொள்ளப்பட்டது. மேலும், வர்த்தகம் தொடர்பாக மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.