ஏழைகளின் வீடுகளில் எரிவாயு இணைப்பும், கழிவறையும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை….

ஒவ்வொரு ஏழை, எளிய மக்களின் வீடுகளில் கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் கடந்த வருடத்தை விட நேரடி வரி வருமானம் 15.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். சிலர் கூறும் பொருளாதார தேக்கநிலை எதையும் பாதிக்கவில்லை என்றும் நிழல் பொருளாதாரம் இந்தியாவில் ஊழலை அதிகரித்துள்ளது, உலகளவில் நாட்டின் பெயரையும் கெடுத்துள்ளது என்று அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை, ரயில் போக்குவரத்து இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அருண் ஜெட்லி, ஒவ்வொரு ஏழை, எளிய மக்களின் வீடுகளிலும் கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *