ஊரகப் பகுதிகளில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஊரகப் பகுதிகளில் உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டம் தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், பிரதமர் மோடி இந்த பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
குழந்தைகள் தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், பாடத்திட்டங்கள் குழந்தைகளுக்கு சுமையாக இருக்ககூடாது என கோரிக்கை விடுத்தார்.