இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாக மாற்றுவதே நோக்கம்; பிலிப்பைன்ஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…

இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாக மாற்றுவதே நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வரும் நாட்களில் தெற்கு ஆசியாவும் தென் கிழக்கு ஆசியாவும் உலக முன்னேற்றத்திற்கு எஞ்சின்கள் போல திகழும் என்று கூறினார். இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிடையேயான உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு என பல துறைகளில் முன்னேறி வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாகவும், இளைஞர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவும் மாற்ற விரும்புவதாக தெரிவித்தார். இதனிடையே பிலிப்பைன்ஸ் இந்தியா ஆகிய இரு நாடுகளிடையே ராணுவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *