உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு வாபஸ்; மாநிலச் சட்டமன்றத்தில், குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல்…

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில், கடந்த வாரம் குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதான வழக்குகளைக் வாபஸ் வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தடை உத்தரவை மீறி அரசியல் கூட்டம் நடத்தியது, ஆள் சேர்த்து பொது மக்களுக்கு இடையூறு செய்தல், முன் அனுமதி வாங்காமல் பொதுக் கூட்டம் நடத்தியது , ஆகிய பிரிவுகளில் கோரக்பூரில் உள்ள பிபின்கஞ்ச் காவல் நிலையத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் தற்போதைய மத்திய இணையமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷீதல் பாண்டே உட்பட 15 பேர்மீது கடந்த ஆயிரத்து 995ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 22 ஆண்டுளாக நடைபெற்று வந்த வழக்கு யோகி ஆதித்ய நாத்திற்கு கடும் தொந்தரவாக இருந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 21ஆன் தேதி மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட யோகி, இந்த வழக்குகளை அரசு வாபஸ் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி, இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்கான மாநில அரசின் ஆணை கோரக்பூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து, யோகி மீது நடைபெற்று வந்த 8 வழக்குகள் உட்பட மொத்த வழக்குகளும் அரசு திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக, இதுவரை 20 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநில அரசின் புதிய சட்டத்திருத்த மசோதாவினால், கடந்த 2 ஆயிரத்து 15 வரை பதிவான வழக்குகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *