இலங்கையில் விமான நிலையத்தில் சட்ட விரோதமாக போதை பொருள் கடத்த முயன்ற நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்தனர்.

யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கைக்கு சென்ற மணி என்பவர் அங்கு, சட்டவிரோதமாக ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப் பொருளை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து சுமார் 212 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட மணி என்பவர் சென்னையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து இலங்கை சுங்கப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *